மூன்றாம் நாளில் இந்தியா ஆதிக்கம் – போராடும் ஆஸி டெய்ல் எண்டர்ஸ்!

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (15:32 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியின் மூன்றாம் நாளில் ஆஸி 135 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி தொடங்கிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் ஆடிய இந்திய அணி கேப்டன் ரஹானேவின் சதத்தால் 326 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 131 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் தொடர்ந்து ஆடிய ஆஸி அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.

மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் ஆஸி அணி 135 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவை விட நான்கு ரன்களே முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்னும் நான்கு விக்கெட்களே கைவசம் உள்ளன. இதனால் இந்திய அணி வெற்றி பெறுவது எப்படியும் உறுதி என்ற நிலையில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா கோப்பை: இந்திய ஏ அணியில் வைபவ் சூர்யவன்ஷி.. கேப்டன் யார்?

பிக் பாஷ் லீக் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்! என்ன காரணம்?

பிக்பாஷ் தொடரில் இருந்து விலகிய அஷ்வின்… காரணம் என்ன?

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தீப்தி சர்மாவுக்கு காவல்துறையில் உயர் பதவி.. அதிரடி அறிவிப்பு..!

குறுக்க இந்த கௌஷிக் வந்தா?... வாஷிங்டன் சுந்தர் டிரேடுக்கு ‘No' சொன்ன நெஹ்ரா!

அடுத்த கட்டுரையில்
Show comments