Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை மகளிர் டி20: மழையால் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா..!

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (08:04 IST)
உலகக்கோப்பை மகளிர் டி 20 கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 
 
நேற்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து ஆறு விக்கெட் விழாவிற்கு 155 ரன்கள் எடுத்தது. ஸ்மிருதி மந்தனா 87 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் 8 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது.
 
இதனையடுத்து டக்வொர்த் லீவிஸ் முறையின்படி இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 6 புள்ளிகள் எடுத்ததை அடுத்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த வருஷம் சி எஸ் கே அணிக்கு ஆடவாங்க… அழைப்பு விடுத்த ருத்துராஜ்… தினேஷ் கார்த்திக் ரியாக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments