Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் ஆசிய கோப்பை: 80 ரன்களில் சுருண்ட வங்கதேசம்.. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

Mahendran
வெள்ளி, 26 ஜூலை 2024 (17:31 IST)
கடந்த சில நாட்களாக மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று இரண்டு அரையிறுதி போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் அரை இறுதி போட்டி இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
 
கேப்டன் சுல்தானா மட்டுமே 32 ரன்கள் எடுத்த நிலையில் 9 வீராங்கனைகள் சிங்கிள் டிஜிட்டில் தான் ரன்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மகளிர் அணி தரப்பில் ரேணுகா  மூன்று விக்கட்டுகளையும் ராதா யாதவ் மூன்று விக்கட்டுகளையும் வீழ்த்தினார்.

இதனை அடுத்து 81 என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய மகளிர் அணி விளையாடி நிலையில் விக்கெட் இழப்பின்றி 11 ஓவர்களில் 83 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. வெர்மா 26 ரன்களும் ஸ்மிருதி  மந்தனா 52 ரன்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் மூன்று விக்கெட் எடுத்த ரேணுகா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments