Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி 3 பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்கள்.. 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்து பேட்டிங்..!

Mahendran
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (17:23 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
 
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. 69 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் கருண் நாயர் மட்டுமே அரைசதம் அடித்து, 57 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்களின் பங்களிப்பு சொற்பமாகவே இருந்தது. குறிப்பாக, கடைசி மூன்று பேட்ஸ்மேன்களான ஆகாஷ் தீப், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ரன் எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது. 14 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 43 ரன்களுடனும், கேப்டன் போப் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி இந்தியாவை விட 127 ரன்கள் பின்தங்கியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி 3 பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்கள்.. 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்து பேட்டிங்..!

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments