முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி: 68 ரன்கள் முன்னணியில் இந்தியா

Webdunia
வெள்ளி, 22 நவம்பர் 2019 (20:49 IST)
இந்தியா மற்றும் வஙக்தேச அணிகள் மோதும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்கியது. இந்தியா விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால் இந்த போட்டியை காண பல விஐபிக்கள் வருகை தந்திருந்தனர்
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி இந்திய பந்துவீச்சாளர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுக்களையும், உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுக்களையும் ஷமி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
 
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய தொடங்கிய இந்திய அணி ஆட்டநேர முடிவின்போது 46 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்திய அணி 68 ரன்கள் முன்னிலையில் உள்ளது. விராத் கோஹ்லி 59 ரன்களுடனும், ரஹானே 23 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். முன்னதாக மயாங்க் அகர்வால் 14 ரன்களும், ரோஹித் சர்மா 21 ரன்களும், புஜாரே 55 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

இந்திய அணி வெற்றி பெற்றபோது கவுதம் காம்பீரை ஏன் பாராட்டவில்லை? கவாஸ்கர் கேள்வி..!

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் எப்போது? தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், சோஃபி டிவைனுக்கு பெரும் கிராக்கி..!

நான் சந்தித்ததிலேயே கோலிதான் GOAT… மிட்செல் ஸ்டார்க் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments