Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிற்சி போட்டியில் இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்த நியூசிலாந்து!

Webdunia
சனி, 25 மே 2019 (18:50 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது
 
இந்த நிலையில் இன்றைய பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா, தவான் ஆகிய இருவரும் தலா 2 ரன்களில் அவுட்டாகினர். விராத் கோஹ்லி, கே.எல்.ராகுல், தோனி, தினேஷ் கார்த்திக் என முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பினர். இருப்பினும் ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் பொறுப்பாக விளையாடி முறையே 54 மற்றும் 30 ரன்களை எடுத்தனர். முடிவில் இந்திய அணி 39.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது.
 
நியூசிலாந்து அணியின் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுக்களையும், நீஷம் 3 விக்கெட்டுக்களையும், செளதி, கிராந்தோம், ஃபெர்கஸ்கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தற்போது 180 என்ற எளிய இலக்கை நோக்கி நியூசிலாது அணி பேட்டிங் செய்து வருகின்றது
 
மற்றொரு பயிற்சி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 297 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments