மகளிர் கிரிக்கெட் போட்டி: தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி

Webdunia
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (22:45 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் முடிந்து விரைவில் டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கவிருக்கும் நிலையில் இந்த இரு நாடுகளின் மகளிர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் நடைபெற்று வருகிறது 
 
 
இந்த நிலையில் இந்திய மகளிர் அணியும், தென் ஆப்பிரிக்க மகளிர் அணியும் இன்று சூரத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இத்னையடுத்து இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது 
 
 
இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்தது. கேப்டன் கவுர் 43 ரன்களும், மந்தனா 21 ரன்களும் எடுத்தனர். இந்த நிலையில் 131 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இதனையடுத்து இந்திய மகளிர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அபாரமாக பந்து வீசிய தீப்தி ஷர்மா ஆட்டநாயகி விருதினைப் பெற்றார். அவர் 4 ஓவர்களில் 3 மெய்டன்களை வீசி 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments