Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருவோம் அடுத்த வருடம் சூறாவளியாக! தோல்விக்கு பின் இம்ரான் தாஹிர் டுவீட்!

Webdunia
திங்கள், 13 மே 2019 (06:38 IST)
நேற்று நடைபெற்ற 2019ஆம் ஆண்டின் ஐபிஎல் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணியின் வாட்சன் கடைசி வரை போராடியும் கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனதால் நூலிழையில் கோப்பையை தவறவிட்டது. 
 
இந்த நிலையில் வெற்றி அடைந்தாலும், தோல்வி அடைந்தாலும் டுவிட்டரில் ஆவேசமாக டுவீட் போடும் ஹர்பஜன்சிங் நேற்றைய தோல்விக்கு பின் எந்த டுவீட்டையும் பதிவு செய்யவில்லை. இருப்பினும் இம்ரான் தாஹிர் வழக்கம்போல் தமிழக ரசிகர்களுக்கு நன்றி கூறி ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:
 
'என் இனிய தமிழ் மக்களே! விடை பெறுகிறேன் இங்கிருந்து, உங்கள் உள்ளங்களில் இருந்து. அன்பு, தோழமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய என் உடன் பிறப்புகளே நன்றி! வருவோம் அடுத்த வருடம் சூறாவளியாக.. என்றென்றும் உங்கள் அன்பு சகோதரன். நில்லாமல் இருக்கட்டும் விசில், எடுடா வண்டிய ... போடுடா விசிலை' என்று இம்ரான் தாஹிர் பதிவு செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அடுத்த கட்டுரையில்
Show comments