Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் கிரிக்கெட்டில் சில மாற்றங்கள் – ஐசிசி ஒப்புதல் அளிக்குமா ?

Webdunia
வியாழன், 14 மார்ச் 2019 (15:20 IST)
கால மாற்றத்திற்கேற்ப டெஸ்ட் கிரிக்கெட்டில் சில மாற்றங்களைக் கொண்டுவர எம்.சி.சி. உலக கிரிக்கெட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

எம்.சி.சி. உலக கிரிக்கெட் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் கடந்த வாரம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் சில மாற்றங்களைக் கொண்டு வருவது பற்றி சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது. அந்த முடிவுகள் எம்.சி.சி அமைப்பின் வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

அதன் படி ‘ஒரு ஓவர் முடிந்ததும் ஓவர் முடிந்ததும் 45 வினாடியிலிருந்து கவுண்ட்டவுன் ஆரம்பிக்கும். இந்த நேரம், பந்தை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேனுக்கு 60 வினாடிகளாகவும், புதிய ஓவரை வீச வரும் வீச்சாளருக்கு 80 வினாடிகளாகவும் அதிகரிக்கப்படும். இதற்காக ஸ்கோர் போர்டில் எலக்ட்ரானிக் கடிகாரம் வைக்கப்படும். இதில் தாமதப்படுத்தினால் எதிர் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். அதுபோல ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இனி ப்ரீ ஹிட் அறிமுகப்படுத்தப்படும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்போது எஸ்.ஜி, கூக்கபுரா, டியூக்ஸ் ஆகிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இனி  ஒரே மாதிரியாகத் தரமான பந்துகளை பயன்படுத்தப்படும்’ என அறிவித்துள்ளனர்.

இந்த பரிந்துரைகளுக்கு ஐசிசி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் விதிகளாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

அடுத்த கட்டுரையில்
Show comments