Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை அணி மீதான தடை நீக்கம்.. ஐசிசி அதிரடி அறிவிப்பு..!

Siva
திங்கள், 29 ஜனவரி 2024 (06:54 IST)
இலங்கை கிரிக்கெட் அணி மீதான தடை நீக்கப்பட்டதாக ஐசிசி அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் விதித்த தடையை ஐசிசி நீக்கியதால் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,.
 
இலங்கை கிரிக்கெட் அணி மீது கடந்த நவம்பர் மாதம் விதித்த தடை நீக்கப்பட்டதாக  ஐசிசி தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசாங்கத்தின் தலையீடு இருப்பதாகக் கூறி, ஐசிசி கடந்த நவம்பர் 10ஆம் தேதி இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இடைநிறுத்தி வைத்தது.
 
இந்த தடையை நீக்கும் முடிவு, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகம், அரசாங்கத்தின் தலையீட்டை முற்றிலும் விலக்கி, தன்னாட்சியாக செயல்படுவதாக உறுதியளித்ததையடுத்து எடுக்கப்பட்டது.
 
இலங்கை கிரிக்கெட் அணி மீதான தடை நீக்கப்பட்டது, இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. இலங்கை அணி தற்போது ஐசிசி உலக தரவரிசையில் 8வது இடத்தில் உள்ளது. இந்த தடை நீக்கம், இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய தொடக்கத்தை வழங்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த பேட்மிண்டன் வீரர்.! விளையாட்டின் போது நடந்த சோகம்..!!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments