Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹார்மோன் சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினால் கிரிக்கெட் விளையாட அனுமதி இல்லை: ஐசிசி அறிவிப்பு..!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (11:30 IST)
ஆணாக இருந்த ஒருவர் ஹார்மோன் சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய பிறகு அவர் பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாட அனுமதி இல்லை என ஐசிசி தெரிவித்துள்ளது.

ஐசிசி தற்போது அறிவித்துள்ள புதிய விதிமுறையில் ஆணுக்குரிய தன்மை கொண்ட ஒருவர் ஹார்மோன் சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினால் அவர் சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்றும்  பெண்கள் அணியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் இந்த விதி சர்வதேச போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் உள்ளூர் போட்டிகளுக்கு அந்தந்த நாடுகளின் பாலின வரைமுறை செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டின் மாண்பையும் நேர்மையையும் வீராங்கனைகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

ஐசிசியின் இந்த விதிகள் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற முதல் திருநங்கையான டேனியல் மெக்காஹே இனி பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த பேட்மிண்டன் வீரர்.! விளையாட்டின் போது நடந்த சோகம்..!!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments