Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்: ஐசிசி நம்பிக்கை

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2018 (22:25 IST)
ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க முயற்சிகள் நடந்து வருவதாகவும், வரும் 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும் என்றும் ஐசிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது
 
கொல்வத்தாவில் இன்று நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 5 நாள் நிர்வாக ரீதியிலான கூட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி டேவ் ரிச்சார்ட்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டை சேர்ப்பது மற்றும் கிரிக்கெட் போட்டியை உலகமயமாக்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
 
ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை இணைக்க வேண்டும் என்று சrவதேச கிரிக்கெட் வாரியம் தீவிர முயற்சிகள் எடுத்து வருவதாகவும், அதற்கான பணியில் துரிதமாக இறங்கி உள்ளதாகவும் டேவ் ரிச்சார்ட்சன் தெரிவித்தார்.
 
மேலும் எங்களுடைய முயற்சிகள் சரியான பாதையில் பயணித்தால் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் கிரிக்கெட் இடம்பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments