Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராத் கோஹ்லியை போல என்னாலும் விளையாட முடியும். பாகிஸ்தான் வீரர் அதிரடி

Webdunia
புதன், 15 மார்ச் 2017 (06:01 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பாபர் ஆசம் என்ற இளம் வீரர் சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 23 ஒருநாள் போட்டிகளில் 4 சதம் மற்றும் 6 அரைசதங்களுடன் 1168 ரன்கள் குவித்துள்ளார். அவருடைஅ சராசரி ரன்விகிதம் 53.09 ஆகும். மேலும் நான்கு டி20 கிரிக்கெட் போட்டிகளில் 116 ரன்கள் எடுத்துள்ளார்.


 


இந்நிலையில் பாபர் ஆசமை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவின் விராத் கோஹ்லியுடன் ஒப்பிட்டு பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து கருத்து கூறிய பாபர் ஆசம், 'என்னை விராட் கோலியுடன் ரசிகர்கள் ஒப்பிட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்திய அணிக்காக விராட் கோலி எப்படி சிறப்பாக விளையாடி வருகிறாரோ, அதேபோல் பாகிஸ்தான் அணிக்காக என்னால் விளையாட முடியும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்

மேலும் ‘‘விராட் கோலி ஒரு மாதிரியாக விளையாடுபவர். நான் ஒரு மாதிரி விளையாடுபவன். என்னுடைய முழுத்திறனையும் வெளிப்படுத்தி பாகிஸ்தான் வெற்றிக்காக விளையாடுவேன். கோலி இந்திய அணியின் வெற்றிக்காக எப்படி விளையாடுகிறாரோ, அதேபோல் பாகிஸ்தானுக்காக என்னால் விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
 

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments