Webdunia - Bharat's app for daily news and videos

Install App

119 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் படுதோல்வி அடைந்த மும்பை

Webdunia
புதன், 25 ஏப்ரல் 2018 (04:55 IST)
நேற்று நடைபெற்ற ஐதராபாத் மற்றும் மும்பை அணிகளூக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்கு ஐதராபாத் கொடுத்த 119 என்ற இலக்கை விரட்ட முடியாமல் வெறும் 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மும்பை அணி படுதோல்வி அடைந்தது.
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் ஐதராபாத் அணி களமிறங்கியது. இந்த அணி 18.4 ஓவர்களில் 118 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
 
இந்த நிலையில் 119 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி, ஐதராபாத் அணியின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 89 ரன்களுக்கு ஆட்டமிழந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 
 
யாதவ் 34 ரன்களும் பாண்ட்யா 24 ரன்களும் அடிக்க மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகினர். 
 
மும்பை அணியின் கவுல் 3 விக்கெட்டுக்களையும் ரஷித் கான் மற்றும் பசில் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். ரஷித்கான் ஆட்டநாயகன் விருதினை வென்றார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் யாரும் தொடாத உச்சம்… அபிஷேக் ஷர்மா படைத்த சாதனை!

மன்னிப்பு கோரினார் பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, ஆனால் கோப்பையை தர மறுப்பு!

ஆஸ்திரேலிய அணியை பொளந்து கட்டிய வைபவ் சூர்யவன்ஷி.. 8 சிக்ஸர்களுடன் மின்னல் வேக சதம்!

திலக் வர்மாவை அழைத்துப் பாராட்டிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியிலேயே இந்தியா அசத்தல் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments