Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

Mahendran
வெள்ளி, 29 நவம்பர் 2024 (15:26 IST)
இதுவரை நிகழாத ஒரு அதிசயமான டி20 போட்டி நடந்துள்ளது. சையது முஸ்தாக் அலி தொடரில் இன்று நடந்த போட்டியில் மணிப்பூர் மற்றும் டெல்லி அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த மணிப்பூர் அணி, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 121 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி, 18.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பில் 124 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் சிறப்பு அம்சமாக, டெல்லி அணியின் அனைத்து 11 வீரர்களும் பந்து வீசினர். கேப்டனும் விக்கெட் கீப்பருமான ஆயுஷ் பதோனி இரண்டு ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

டி20 கிரிக்கெட்டில் இதுவரை இல்லாத வகையில் ஒரு அணியின் அனைத்து வீரர்களும் பவுலிங் செய்த இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிறப்பான நிகழ்வு டி20 கிரிக்கெட்டின் வரலாற்றில் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!

ரிஷப் பண்ட்டும் லக்னோ அணிக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகலாம்.. சமூகவலைதளத்தில் பரவும் கருத்துகள்!

ரஹானேவுடனான மோதல்.. மும்பை அணியை விட்டு கோவாவுக்கு செல்லும் ஜெய்ஸ்வால்!

தோனி எனது கிரிக்கெட் தந்தை.. பேபி மலிங்கா பதிரனா நெகிழ்ச்சி!

போன வாரம் 250 ரன் அடிச்சோம்.. ஆனா அடுத்தடுத்து மூன்று தோல்விகள்- பாட் கம்மின்ஸ் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments