Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் பேட்டை திருடியது யார்? சிஎஸ்கே வீரர் டுவிட்டரில் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 8 மார்ச் 2020 (15:19 IST)
ஐபிஎல் திருவிழா இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கவிருக்கும் வேலையில் சிஎஸ்கே வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தல தோனி உள்பட ஒருசிலர் வீரர்கள் பயிற்சி எடுத்து வரும் நிலையில் இன்னும் ஒருசில வீரர்கள் விரைவில் பயிற்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
இந்த நிலையில் மும்பையில் இருந்து சென்னைக்கு சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் அவர்கள் நேற்று விமானம் மூலம் வந்துள்ளார். அவர் இண்டிகோ விமானத்தின் மூலம் சென்னை வந்து கொண்டிருந்தபோது அவரது பேட்டை யாரோ திருடி விட்டதாக தெரிகிறது
 
இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். பேட்டை திருடிய நபர் தயவு செய்து உடனடியாக என்னுடைய பேட்டை கொண்டு வந்து கொடுத்து விடுங்கள். இல்லையேல் அவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையை அணுகுவேன்’ என்று அவர் தனது டுவிட்டரில் எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கையை அடுத்து அவருக்கு அவருடைய பேட் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் 18 ஆண்டுகள் காத்திருந்தேன்… அனுஷ்கா சர்மா 11 ஆண்டுகள் காத்திருந்தார் –கோலி உருக்கம்!

எனது கனவை நனவாக்கிய அனைவருக்கும் நன்றி… RCB அணி குறித்து விஜய் மல்லையா நெகிழ்ச்சி!

கண்ணீரில் மிதக்கிறேன்… அண்ணனைப் பற்றி ட்வீட் செய்த ஹர்திக் பாண்ட்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments