Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

15வது ஐரோப்பிய கால்பந்து போட்டி: பட்டாசுகளை தூக்கி வீசி ரசிகர்கள் ரகளை- வீடியோ

15வது ஐரோப்பிய கால்பந்து போட்டி: பட்டாசுகளை தூக்கி வீசி ரசிகர்கள் ரகளை- வீடியோ
, சனி, 18 ஜூன் 2016 (12:22 IST)
15வது ஐரோப்பிய கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது.24 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் நடந்து வருகிறது.


இந்நிலையில் லீக் ஆட்டத்தில் செக் குடியரசு அணி குரோஷியா அணியுடன் மோதியது. இரு அணிகளுமே தலா இரு கோல்கள் பெற்ற நிலையில் வெற்றிக்காக கடுமையாக போராடின. இதையடுத்து குரோஷியா கால்பந்து அணி ரசிகர்கள் திடீரென ரகளையில் ஈடுபட்டனர்.  மேலும் நெருப்புச் சுடர்களை எரியவிட்டு அவைகளை மைதானத்தில் தூக்கி வீசினர். இதனால் ஆட்டம் நிறுத்துவைக்கப்பட்டது

இதனிடையே குரோஷிய கால்பந்து அணி வீரர்களில் சிலர் ரகளையில் ஈடுபடும் ரசிகர்களுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளனர். பின்னர் தொடர்ந்து நடந்த இந்த போட்டி டிராவில் முடிந்தது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒலிம்பிக்கில் தமிழக வீரர் சதீஷ் குமார்: தங்கம் வெல்வாரா?