Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனி ஒருவனாக போராடிய தோனி: இந்தியா 112க்கு ஆல்-அவுட்

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (14:49 IST)
இந்திய இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தோனி தனி ஒருவனாக போராடி 65 ரன்கள் எடுத்துள்ளார்

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பியதால் ஒருகட்டத்தில் இந்திய அணி 29 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது

இந்திய அணி ஐம்பது ரன்களை தாண்டுமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் தல தோனி அதிரடியாக விளையாடி 65 ரன்களை குவித்தார். இதில் 10 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். இறுதியில் இந்திய அணி 38.2 ஓவர்களில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. வெற்றி பெற 113 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் இலங்கை வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments