Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி தங்கியிருந்த ஹோட்டலில் தீ விபத்து: சக வீரர்கள் சிக்கி தவிப்பு!!

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2017 (10:49 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது அணியினருடன் தங்கி இருந்த ஓட்டலில் திடீரென தீ பிடித்தது.


 
 
விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்து வருகிறது. இதன் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற இருந்தது. இந்த போட்டியில் மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் அணிகள் மோதுகின்றன. 
 
இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைமையிலான ஜார்கண்ட் அணியினர் துவாரகா ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
 
இந்த ஓட்டலில் இன்று காலை எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த வீரர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். 
 
இதனால், இன்று நடைபெறுவதாக இருந்த மேற்குவங்கம் - ஜார்கண்ட் இடையேயான அரையிறுதிப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments