Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரபல நடிகர் கைது

Webdunia
சனி, 2 ஜூன் 2018 (15:23 IST)
சல்மான் கானின் தம்பியும், பாலிவுட் நடிகரும் மற்றும் தயாரிப்பாளருமான அர்பாஸ்கான் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஐபிஎல் சூதாட்டத்தை தடுக்க சமீபத்தில் மும்பை போலீசார்  சூதாட்ட கும்பலின் தலைவன் சோனு ஜலான் என்பவனை கைது செய்தனர். 
 
அவனிடம் கைப்பற்றிய டைரியில், ஐபிஎல் சூதாட்டத்தில் பல பிரபலங்கள் ஈடுபட்டது தெரியவந்ததாகவும், அவர்களில் ஒருவர் பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அர்பாஸ்கான் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து மும்பை போலீசார் நடிகர் அர்பாஸ்கானை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பினர். போலீஸாரிடம் இன்று நேரில் ஆஜரான அர்பாஸ்கான்,  ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். சூதாட்டத்தில் 2.75 கோடி ரூபாயை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட உள்ளார்.
 
போலீஸார் கைப்பற்றிய டைரியில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் பலரது பெயரும் இடம்பெற்றுள்ளதாக, வழக்கை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

அடுத்த கட்டுரையில்
Show comments