Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலுவான நிலையில் இங்கிலாந்து… விக்கெட் கிடைக்காமல் இந்திய பவுலர்கள் தடுமாற்றம்!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (17:40 IST)
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நேற்று படு மோசமாக விளையாடி 78 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது என்பது தெரிந்ததே. நேற்றைய போட்டியில் இரண்டு பேட்ஸ்மேன்களை தவிர அனைவருமே ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆகினர் என்பதும் ஜேம்ஸ் ஆண்டர்சன் மிக அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 120 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட்டை ஷமி வீழ்த்தியுள்ளார். பேர்ன்ஸ் 61 ரன்களில் அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .இருப்பினும் தற்போது இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 62 ரன்கள் முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் மற்றொரு தொடக்க வீரரான ஹமீதை ஜடேஜா 68 ரன்களில் வீழ்த்தினார்.

உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 182 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்கள் மட்டுமே இழந்து வலுவான நிலையில் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments