Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலுவான நிலையை நோக்கி இங்கிலாந்து… விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் இந்திய பவுலர்கள்!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (13:59 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்  முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 3 சுழல்பந்து வீச்சாளர்களோடு களமிறங்கியுள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்கார ஜோடி முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுக்க, அஸ்வின் பந்தில் ரோரி பர்ன்ஸ் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த  டேனியல் லாரன்ஸை பூம்ரா ரன்கள் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழக்க செய்தார். இதனால் இந்தியாவின் ஆதிக்கம் வந்தது போல இருந்தது.

ஆனால் அதன் பின்னர் வந்த ஜோ ரூட்டும் தொடக்க ஆட்டக்காரர் சிப்ளியும் விக்கெட்களை இழக்காமல் ஆடி வருகின்றனர். சற்று முன்பு வரை இங்கிலாந்து அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 127 ரன்கள் சேர்த்துள்ளது. சிப்ளி அரைசதம் அடித்து களத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்

14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!

ஆஸி அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments