Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணியில் இருந்து நீக்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் – என்ன காரணம்!

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (13:48 IST)
இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் போட்டி தொடங்கும் சில மணிநேரங்களுக்கு முன்னதாக நீக்கப்பட்டார்.

இங்கிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் சவுத்தாம்ப்டனில் நடந்த  முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. அதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டார்.

இது அனைவருக்கும் ஆச்சர்யம் அளிக்க அவர் கொரோனா கால விதிமுறைகளை மீறியதாலேயே அவர் நீக்கப்பட்டதாகவும், அவரை 5 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த 5 நாட்களில் அவருக்கு 2 முறை கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அதில் நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அவர் அடுத்த போட்டியில் கலந்துகொள்ள முடியும் எனவும் சொல்லப்படுகிறது.
இது குறித்து ஜோப்ரா ஆர்ச்சர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சின், கோலிக்கு இணையான மரியாதையை பும்ராவுக்குக் கொடுக்கவேண்டும் –அஸ்வின் கருத்து!

பும்ரா இல்லாவிட்டால் இரண்டாவது டெஸ்ட்டிலும் தோல்விதான்… ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

அமெரிக்காவில் சி எஸ் கே நிர்வாகிகளோடு சஞ்சு சாம்சன் சந்திப்பு… அப்ப உண்மதான் போலயே!

ஹர்திக் என்னுடையவன்… அவன் இல்லாமல் உலகக் கோப்பை இல்லை – முத்தம் குறித்த சீக்ரெட்டைப் பகிர்ந்த ரோஹித்!

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments