Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிச்சயம் தவிர்ப்போம்: ஜோஸ் பட்லர்

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (17:21 IST)
உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதலை நாங்கள் தவிர்ப்போம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
 
இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் நாளை இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 2வது அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதாமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று தெரிவித்துள்ளார்
 
அரையிறுதியில் நாங்கள் இந்தியாவை எதிர்கொள்ள உற்சாகமாக இருக்கிறோம் என்றும் உலகின் மிகச் சிறந்த மைதானத்தில் மிகச் சிறந்த அணியை எதிர்கொள்ள இருக்கிறோம் என்றாலும் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கும் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்தார்
 
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியை மோதுவதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை என்றும் ஆகவே அது நடக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments