Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓய்வு முடிவால் வருத்தம் ஏதும் இல்லை: சீன வீராங்கனை லீ நா

ஓய்வு முடிவால் வருத்தம் ஏதும் இல்லை: சீன வீராங்கனை லீ நா
, திங்கள், 22 செப்டம்பர் 2014 (15:50 IST)
சீன டென்னிஸ் வீராங்கனை லீ நா, சில தினங்களுக்கு முன் தனது ஓய்வு முடிவை அறிவித்திருந்த நிலையில் தற்போது, ஓய்வு முடிவால் வருத்தம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார். 
 
உலக தரவரிசையில் 6 ஆவது இடம் வகிக்கும் லீ நா, அடிக்கடி கால் முட்டி காயத்தால் மிகவும் அவதிபட்டுக் கொண்டிருந்தார். இதனால் டென்னிஸ் போட்டிகளில் இருந்து முற்றிலும் விடைபெறுவதாக கூறினார். 
 
பின்னர் இதுகுறித்து லீ நா, செய்தியாளர்களிடம் கூறுகையில், டென்னிஸை விட்டு விலக இதுவே சரியான தருணமாகும். இதில் எவ்வித வருத்தமும் இல்லை. டென்னிஸ் வாழ்க்கையை நினைத்து பெருமிதமும் கொள்கிறேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
 
ஒற்றையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஒரே ஆசிய டென்னிஸ் வீராங்கனை லீ நா என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil