Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த சீசனில் நான் ஒன்றும் செய்யவில்லை… வெற்றிக்குப் பின் தோனி!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (10:12 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்று நடந்த முதல் குவாலிபையர் போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 172 ரன்கள் சேர்த்த நிலையில் 173 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டூபிளஸ்சிஸ்ஒரு ரன்னில் அவுட்டாகி போதிலும் ருத்ராஜ் மற்றும் உத்தப்பா மிக அபாரமாக விளையாடினர். கடைசியில் களமிறங்கிய தோனி அடுத்தடுத்து ஒரே ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்து தான் ஒரு ஃபினிஷர் என்பதை உறுதி செய்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய தோனி ‘நான் இந்த சீசனில் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஆனால் வலைகளில் நான் நன்றாகவே பேட் செய்தேன். அதனால் அதிகமாக யோசிக்கவில்லை, யோசித்தால் திட்டங்களைப் போட்டு குழப்ப வேண்டிவரும். கடந்த சீசனில் நாங்கள் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறாமல் சென்றோம். ஆனால் கடைசி சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டோம். அதன் பலனைதான் இந்த சீசனில் அனுபவிக்கிறோம்’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments