Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி ஓய்வு: வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (19:40 IST)
இந்திய அணியிலுள்ள மூத்த கிரிக்கெட் வீரரான தோனிக்கு தற்போது  36 வயதாகிறது. தோனியின் வயதை காரணம் காட்டியே பலர் இவரை விமர்சித்து வருகின்றனர். 
 
மேலும், தோனி ஃபிட்டாக இல்லை எனவும் அவரது உடல் தகுதியை விமர்சித்து அவர் கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். மேலும், அவர் எப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். 
 
இந்நிலையில், தோனி மொஹாலியில் நடக்கும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியோடு ஓய்வு பெறுவார் என்று செய்திகள் வெளியாகியது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இது குறித்த உண்மை தகவலை ஆராய்ந்த போது, பின்வரும் செய்தி வெளியாகியுள்ளது. மும்பை போலீஸுக்கு சொந்தமான பாதுகாப்பு நாய் ஒன்று தனது பணியில் இருந்து டிசம்பர் 13 ஆம் தேதி ஓய்வு பெறுகிறது. 
 
இந்த நாயின் பெயர் தோனி. கடைசியாக அந்த நாய் மொஹாலி கிரிக்கெட் போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும். அதன் பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்து ஓய்வு பெறும் என தெரியவந்துள்ளது. தோனி ஓய்வு குறித்து உண்மை செய்தி வெளியான பின்னர்தான் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments