Webdunia - Bharat's app for daily news and videos

Install App

200 ரன்கள் டார்கெட் கொடுத்த ராஜஸ்தான்.. 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் டெல்லி..!

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2023 (18:05 IST)
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியில் இன்றைய முதல் போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. 
 
அந்த அணியின் ஜாஸ் பட்லர் 79 ரன்களும் ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்துள்ளனர். ஹெட்மயர் அதிரடியாக 39 ரன்கள் எடுத்தார் அதில் நான்கு சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் 200 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது டெல்லி பேட்டிங் செய்து வரும் நிலையில் பிரத்வியூ ஷா மற்றும் மணிஷ் பாண்டே ஆகிய இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகியுள்ளனர். சற்று முன் வரை அந்த அணி ஆறு ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து 39 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 
 
டெல்லி இதுவரை ஒரு போட்டியில் கூட ஜெயிக்காத நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments