Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

Siva
திங்கள், 7 ஜூலை 2025 (14:57 IST)
டெல்லி பிரீமியர் லீக் (DPL) போட்டியில், விரேந்தர் சேவாக் மகன் மற்றும் விராட் கோலியின் உறவினர் ஆகியோர் விளையாட போவதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த இரு வீரர்களின் ஏல விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சேவாக்கின் மூத்த மகனான ஆர்யாவீர், ஏற்கனவே 19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில்,  சென்ட்ரல் டெல்லி கிங்ஸ் அணியால் ரூ.8 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அதேபோல், விராட் கோலியின் நெருங்கிய உறவினர் பெயரும் ஆச்சரியமாக ஆர்யாவீர் தான் என்பதும், அவர் சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணியால் ரூ.1 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சேவாக் மகன் ஆர்யாவீர் தனது தந்தையை போலவே அதிரடி தொடக்க ஆட்டக்காரர் என்பதும், கடுமையான போட்டிக்கு மத்தியில் அவர் சென்ட்ரல் டெல்லி கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல், விராட் கோலியின் உறவினர், டெல்லி ரஞ்சித் டிராபி கேப்டன் ஆயுஷ் பதானி தலைமையிலான சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த ஏலத்தில் மிகவும் விலை உயர்ந்த வீரராக சிமர்ஜீத் சிங் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு ₹38 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணமாக இந்த வெற்றி இருக்கும்- ஷுப்மன் கில் பூரிப்பு!

பிபிஎல்2 - தொடக்க ஆட்டத்தில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அசத்தல் வெற்றி

போர் படை ஆயிரம்.. இவன் பேர் இன்றி முடியாதே..! - ‘தல’ தோனியின் வாழ்க்கை வரலாறு!

A Rare OG… 2k கிட்ஸ் பாஷையில் தோனிக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்!

கோலியைப் பார்த்து எதிரணி வீரர்கள் அஞ்சுவார்கள்… நடுவர் அனில் சௌத்ரி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments