Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 முறை அணியை ஃபைனலுக்கு கொண்டு சென்ற ஒரே கேப்டன்: தோனிக்கு குவியும் வாழ்த்து..!

Webdunia
புதன், 24 மே 2023 (07:00 IST)
நேற்று சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடந்த குவாலிஃபயர் ஒன்று போட்டியில் சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதனை அடுத்து ஐபிஎல் வரலாற்றில் 10 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்ற பெருமை பெற்றதோடு 10 முறை ஒரு அணியை ஃபைனலுக்கு கொண்டு சென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையும் தோனிக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து தோனிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் குஜராத் அணியோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதற்கு முன்பு மூன்று முறை மோதிய நிலையில் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. ஆனால் நேற்று வெற்றி பெற்று குஜராத் அணியை வீழ்த்தியதை அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மகிழ்ச்சியுள்ளனர். 
 
லீக் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தை பெறுவது முக்கியமல்ல,  முதலில் ஃபைனலுக்கு யார் செல்வது என்பதுதான் முக்கியம் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் சிஎஸ்கேவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments