Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கொரோனா சோதனை – சி எஸ் கே அணிக்கு சாதகமான முடிவுகள்!

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (16:38 IST)
இரண்டு வீரர்கள் உள்பட சி எஸ் கே அணியைச் சேர்ந்த 13 பேருக்குக் கொரோனா இருப்பதாக  தகவல்கள் வெளியான நிலையில் இரண்டாம் கட்ட சோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐக்கிய அரபு நாட்டில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பணியாளர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் அணியில் உள்ள தீபக் சஹார் மற்றும் ருதுராஜ் என்ற இருவராவர். 

இதனால் சென்னை அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளாமல் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இப்போது நடந்த அடுத்த கட்ட சோதனையில் வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்ற முடிவு வந்துள்ளது. இதனால் செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் பயிற்சியில் சி எஸ் கே அணியினர் கலந்துகொள்வார்கள் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீரர்களை ஆழ்கடலில் தள்ளிவிடுவது போன்றது- முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின் கம்பீர்!

கங்குலி பயோபிக்கில் நடிக்க பதற்றமாக உள்ளது… பிரபல நடிகர் பதில்!

ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு வெற்றி… தோல்விப் பாதையில் இந்தியா!

350 ரன்களுக்கு மேல் இலக்கு… இரண்டு முறையும் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

இந்தியாவின் பீல்டிங் டெஸ்ட் தரத்தில் இல்லை.. தோல்விக்கு காரணம் இதுதான்: சுனில் கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments