Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி சொல்லிதான் நாங்கள் சென்னையில் அதை செய்தோம்- சி எஸ் கே அணி நிர்வாகி பதில்!

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (10:59 IST)
தோனி சொல்லிதான் சென்னையில் நான்கைந்து தினங்கள் பயிற்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டதாக சென்னை அணியைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தோனி சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றபின் நடக்கும் ஐபிஎல் தொடர் என்பதால் ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளனர். இதற்காக சென்னையில் சில நாட்கள் பயிற்சியை மேற்கொண்ட சி எஸ் கே வீரர்கள் இப்போது துபாய்க்கு சென்று அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இணையதள சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சி எஸ் கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ‘பயிற்சி விஷயமாக நான் தோனியிட்ம் பேசினேன். அப்போது அவர் ‘நாங்கள் 4-5 மாதங்களாக கிரிக்கெட் விளையாடவில்லை. அதனால் அணியின் வீரர்கள் அனைவரும் துபாய்க்கு செல்வதற்கு முன் சென்னையில் ஒன்றுக் கூட வேண்டும். நாங்கள் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டும். அத்தகைய சூழல் துபாய் சென்ற பின்பும் எங்களுக்கு உதவும்' எனத் தெரிவித்தார். அதனால்தான் நாங்கள் சென்னையில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Keep calm and believe in kohli… ஆதரவாக பேசிய கெய்ல்!

இரட்டை சதமடித்த சஃபாலி வெர்மா... இந்திய மகளிர் அணியின் முதல் நாள் ஸ்கோர்..!

உங்கள் குப்பையை நீங்களே வைத்துக் கொண்டு அடுத்த வேலையைப் பாருங்கள்- இங்கிலாந்து வீரரை சாடிய ஹர்பஜன் சிங்!

விராட் கோலியிடம் சுயநலமில்லை…அணிக்காக அவர் இதை செய்கிறார்- அஸ்வின் சப்போர்ட்!

இறுதிப் போட்டியில் மழை பெய்ய எத்தனை சதவீதம் வாய்ப்புள்ளது?… வெளியான வானிலை அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments