Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரொனால்டோவை கருவிலேயே அழிக்க நினைத்தேன் - தாயார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ரொனால்டோவை கருவிலேயே அழிக்க நினைத்தேன் - தாயார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
, சனி, 19 ஜூலை 2014 (17:10 IST)
கால்பந்து உலகில் பிரபலமான வீரர்களின் பட்டியலில் போர்ச்சுகல் கேப்டனும், ரியல் மாட்ரிட் கிளப் வீரருமான 29 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு தனி இடம் உண்டு.
ஆனால் அவரை கருவில் சுமந்த போதே அழித்து விட வேண்டும் என்று முயற்சித்தாராம் அவரது தாயார் டோலோரஸ் அவிரோ.
 
இந்த அதிர்ச்சிகரமான தகவலை அவரே வெளியிட்டுள்ளார். ‘துணிச்சலான தாய்’ என்ற பெயரில் டோலோரஸ் சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் ‘ரொனால்டோவை கருவில் இருக்கும் போதே அழிக்க நினைத்தேன். கருவை கலைப்பதற்கு டாக்டரை அணுகினேன். ஆனால் அவர் முடியாது என்று மறுத்து விட்டார்.
 
இதனால் வேறுவழியிலாவது கலைத்து விடலாம் என்று நினைத்து, பீர் குடித்து விட்டு, நீண்ட தூரம் ஓடினேன். ஆனாலும் எனது எண்ணம் ஈடேறவில்லை. பின்னாலில் இந்த ரகசியத்தை தெரிந்து கொண்ட ரொனால்டோ அவ்வப்போது ‘ஜோக்’ செய்வார். ‘அம்மா என்னை பாருங்கள்.. நீங்கள் கருவிலேயே அழிக்க நினைத்தீர்கள்.
 
ஆனால் நான் தான் இப்போது சம்பாதித்து உங்களையும், வீட்டையும் காப்பாற்றுகிறேன் என அடிக்கடி சொல்வார்’ என்று அந்த புத்தகத்தில் டோலோரஸ் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil