Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேகமாக வந்து தாக்கிய பந்து – கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த சோகம் !

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (16:16 IST)
செங்கல்பட்டு அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது நெஞ்சில் பந்து தாக்கி சுனில் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அகரம் என்ற கிராமத்தில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்தன. அதில் சூனாம்பேடு மற்றும் அச்சிறுபாக்கம் ஆகிய கிராமங்களை சேர்ந்த வீரர்கள் மோதிய போட்டி நடந்துள்ளது. அப்போது சுனில் என்ற இளைஞர் பேட் செய்து கொண்டிருக்கும் போது கமலேஷ் என்ற மாணவன் பந்து வீசியுள்ளான்.

அப்போது எதிர்பாராத விதமாக பந்து சுனிலின் நெஞ்சில் தாக்கியுள்ளது. இதையடுத்து அம்மாணவன் மயங்கி விழ, அவரை உடனடியாக ஆம்புலன்ஸில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் பாதி வழியிலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது அகரம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments