ஸ்டார் ஸ்போர்ட் ஐபிஎல் உரிமத்திற்கும் தோனிக்கும் என்ன தொடர்பு?

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (14:46 IST)
ஐபிஎல் போட்டிகளுக்கான தொலைக்காட்சி உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட் நிறுவனம் பெற்றுள்ளது. அதே போல் இந்த வருட ஐபிஎல் தொடர்களில் சிஎஸ்கே அணி தடைக்காலம் முடிந்து விளையாடயுள்ளது.


 
 
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம், ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. 10 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் இந்த சீசனுக்கான ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமத்தை, ஸ்டார் ஸ்போர்ட் நிறுவனம் ரூ.16,347 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
 
மேலும், இரண்டு ஆண்டுகள் விளையாட இருந்த தடை நீங்கி மீண்டும் போட்டியில் களமிறங்க உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் களத்தில் இறங்க உள்ளதால், ஐபிஎல் போட்டிகள் மீதான ஆர்வம் உயர்ந்துள்ளது. 
 
இதற்கு முக்கிய காரணம் சிஎஸ்கே ரீஎண்ட்ரி என கூறப்படுகிறது. இந்திய அணி விளையாடும் சர்வதேச போட்டிகளைவிட, ஐபிஎல் போட்டிகளுக்கு அதிக விலை கொடுத்துள்ளது ஸ்டார் ஸ்போர்ட்ஸ். 
 
இந்தியா விளையாடும் ஒரு சர்வதேச போட்டிக்கு ரூ.33 கோடி வரைதான் வழங்கும். ஆனால், ஐபிஎல் ஒரு போட்டிக்கு ரூ.55 கோடி வழங்கியுள்ளது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

ஐபிஎல் 2026 சீசனில் RCB அணிக்கு வேறு home மைதானமா?... பரவும் தகவல்!

விவாகரத்துக்கு பின் பயந்து நடுங்கினேன்.. சானியா மிர்சாவின் அதிர்ச்சி பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments