Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் போட்டி: பளு தூக்குதலில் இந்திய வீராங்கனை தங்கப் பதக்கம் வென்றார்

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2014 (10:37 IST)
காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்கும் பிரிவில் இந்தியா முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

48 கிலோ எடைப் பிரிவினருக்கான போட்டியில் இந்தியாவின் குமுக்சம் சஞ்சிதா சானு தங்கப் பதக்கத்தையும், மற்றொரு இந்திய வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

சஞ்சிதா 173 கிலோ எடையைத் தூக்கினார். இருப்பினும், டெல்லி காமன்வெல்த் போட்டிகளில் முதலிடம் பிடித்த அகஸ்டினாவின் கெம் வோகோலாவின் (175 கிலோ) சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை நழுவ விட்டார்.

2 ஆவது இடம் பிடித்த மீராபாய் 170 கிலோ (75+95) எடையைத் தூக்கினார். நைஜீரியாவின் கெச்சி ஒபாரா 162 (70+92) எடையைத் தூக்கி மூன்றாவது இடம் பிடித்தார்.

ஜூடோ போட்டியில் இரண்டு வெள்ளிப்பதக்கம், ஒரு வெண்கலப்பதக்கத்தையும் இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

Show comments