Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காமென்வெல்த் போட்டியிலிருந்து பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா விலகல்

காமென்வெல்த் போட்டியிலிருந்து பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா விலகல்
, வெள்ளி, 18 ஜூலை 2014 (18:07 IST)
காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியிலிருந்து விலகுவதாக இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் போது காலில் காயம் ஏற்பட்டதால் காமென்வெல்த் போட்டியில் பங்கேற்கவில்லை என்று சாய்னா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "போட்டியில் பங்கேற்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது. போட்டிக்கான பயிற்சியை இன்னும் நான் தொடங்கவில்லை என்றாலும், போட்டியில் பங்கேற்கும் ஆர்வத்ததில் இருந்தேன். காலில் காயம் ஏற்பட்டதால் போட்டியில் பங்கேற்கவில்லை" என்று சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.

சாய்னா நேவால் 2010 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமென்வெல்த் போட்டியில் தங்கம் பதக்கம் வென்றார். ஆசியப் போட்டி மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்கவுள்ளதாக சாய்னா நேவால் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil