Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் போட்டிகள்: ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம்

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (19:00 IST)
ஆஸ்திரேலியாவில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளது.
 
ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் போட்டி நாளை தொடங்கி வரும் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 71 நாடுகளில் இருந்து சுமார் 4500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றன. இந்தியா சார்பில் 14 விளையாட்டுகளில் 219 வீரர்- வீராங்கனைகள் களம் இறங்குகின்றனர்.
 
அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் 474 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இந்த போட்டியை பொறுத்தமட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளே பெரும்பாலும் பதக்கப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை அலங்கரித்து வருகிறது.
 
இந்த போட்டிகளில் இந்தியா இதுவரை 16 முறை பங்கேற்று 155 தங்கம் உள்பட 438 பதக்கங்களை வென்றுள்ளது. குறிப்பாக 2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற போட்டிகளில் அதிகபட்சமாக 101 பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரன் எடுக்க ஓடும்போது மோதிய கார்ஸ்.. டென்ஷன் ஆன ஜடேஜா.. காரசாரமான வாக்குவாதம்..!

94க்கு 7 விக்கெட்.. ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா.. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

பி.பி.எல்2 : வில்லியனூர் அணி அதிரடி ஆட்டம்; ஊசுடு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு..! விக்கெட்டை வீழ்த்தி டக்கெட்டை சீண்டிய சிராஜ்! அபராதம் விதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments