Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் போட்டிகள்: ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம்

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (19:00 IST)
ஆஸ்திரேலியாவில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளது.
 
ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் போட்டி நாளை தொடங்கி வரும் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 71 நாடுகளில் இருந்து சுமார் 4500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றன. இந்தியா சார்பில் 14 விளையாட்டுகளில் 219 வீரர்- வீராங்கனைகள் களம் இறங்குகின்றனர்.
 
அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் 474 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இந்த போட்டியை பொறுத்தமட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளே பெரும்பாலும் பதக்கப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை அலங்கரித்து வருகிறது.
 
இந்த போட்டிகளில் இந்தியா இதுவரை 16 முறை பங்கேற்று 155 தங்கம் உள்பட 438 பதக்கங்களை வென்றுள்ளது. குறிப்பாக 2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற போட்டிகளில் அதிகபட்சமாக 101 பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள்! ரொனால்டோ முதலிடம்! - சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

கோலி ஓய்வு முடிவில் தெளிவாக இருந்தார்… என் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொன்னார் – மனம் திறந்த ரவி சாஸ்திரி!

அடுத்த கட்டுரையில்
Show comments