Webdunia - Bharat's app for daily news and videos

Install App

34 வயதிலேயே ஓய்வை அறிவித்த மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரர்!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (10:51 IST)
தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் வீரர்களில் ஒருவரான கிறிஸ் மோரிஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் வீரராக கவனம் ஈர்த்தவர் கிறிஸ் மோரிஸ். ஆனால் அவருக்கு மிகப்பெரிய பிரபல்யத்தை பெற்று தந்தது ஐபிஎல் தொடர்தான். கடைசியாக ராஜஸ்தான் அணிக்காக 16 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு அனைவரையும் வியக்க வைத்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அவர் விளையாடவில்லை.

மேலும் தென் ஆப்பிரிக்க அணியிலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் தன்னுடைய 34 வயதிலேயே அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்காக 42 ஒருநாள் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments