தாக்குதலுக்குள்ளான மார்கஸ் ரஷ்போர்ட்; கலங்க வைத்த சிறுவனின் கடிதம்!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (08:42 IST)
ஈரோ உலகக்கோப்பை கால்பந்தில் விளையாடிய மார்கஸ் ரஷ்போர்ட் இனரீதியான தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் சிறுவன் எழுதியுள்ள கடிதம் வைரலாகியுள்ளது.

ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதியில் இத்தாலி – இங்கிலாந்து மோதிக் கொண்ட நிலையில் பெனால்டி ஷாட்டில் இங்கிலாந்து வீரர்கள் கோலை தவறவிட்டதால் இங்கிலாந்து தோல்வியை தழுவியது. அதை தொடர்ந்து இங்கிலாந்து வீரர்களை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

முக்கியமாக பெனால்டி ஷாட் வாய்ப்பு அளிக்கப்பட்ட மார்கஸ் ரஷ்போர்ட் உள்ளிட்ட மூன்று இங்கிலாந்து வீரர்களும் கருப்பினத்தவர் என்பதால் இனரீதியான விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில் மார்கஸ் ரஷ்போடிற்கு கடிதம் எழுதியுள்ள 9 வயது சிறுவன் “டியர் ரஷ்போர்ட். கடந்த ஆண்டில் ஏழை மக்களுக்கு உதவி என்னை கவர்ந்தீர்கள், தற்போது அனைத்து தாக்குதல்களையும் அமைதியாக கடந்து சென்று கவர்ந்துள்ளீர்கள். என்றுமே நீங்கள்தான் என் ஹீரோ. மோசமான சம்பவங்களை புறக்கணியுங்கள்” என எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments