கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.. டிராவிடை அடுத்து ‘புதிய சுவர்’ என போற்றப்பட்ட புஜாரா அறிவிப்பு..!

Siva
ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2025 (14:15 IST)
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் 'புதிய சுவர்' எனப் போற்றப்பட்ட முன்னணி வீரர் சேதேஷ்வர் புஜாரா, அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
 
குஜராத்தின் ராஜ்கோட் நகரில் இருந்து வந்த புஜாரா, கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். தனது 13 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், இந்திய அணிக்காக அவர் 103 டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவருக்குப் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டார். கடந்த 2023-ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தான் அவர் கடைசியாக இந்திய அணிக்காக விளையாடினார்.
 
தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில், 103 போட்டிகளில் 19 சதங்கள், 35 அரைசதங்கள் மற்றும் 3 இரட்டை சதங்கள் உட்பட மொத்தம் 7,195 ரன்களை புஜாரா குவித்துள்ளார். இந்திய அணி பலமுறை கடினமான சூழ்நிலைகளில் சிக்கியபோது, தனது பொறுமையான மற்றும் நீண்ட இன்னிங்ஸ் மூலம் அணியைச் சரிவில் இருந்து காப்பாற்றியுள்ளார். அதனால்தான், அவருக்கு ராகுல் டிராவிட்டுக்குப்பிறகு 'புதிய சுவர்' என்ற பட்டம் கிடைத்தது. 
 
சமீபகாலமாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறாத நிலையில், அவரது ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பும், சாதனைகளும் என்றென்றும் நினைவுகூரப்படும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

ஸ்மிருதி மந்தனா திருமண தேதி அறிவிப்பு.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

அடுத்த கட்டுரையில்
Show comments