Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அணியின் அபார பந்துவீச்சால் பஞ்சாப் திணறல்

Webdunia
ஞாயிறு, 20 மே 2018 (20:26 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 56வது போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 52 ரன்களுக்கும் அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் நிலை உள்ளது. ஆனால் அந்த அணி சென்னையின் அபார பந்துவீச்சால் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 30 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் பஞ்சாப் அணி பேட்டிங் செய்து வருகின்றது. தொடக்க ஆட்டக்காரரான அதிரடி பேட்ஸ்மேன் கெய்லே ரன் ஏதும் எடுக்காமல் இரண்டாவது ஓவரிலேயே அவுட் ஆனார். அதேபோல் இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 7 ரன்கள் எடுத்த நிலையிலும், பின்ச் 4 ரன்கள் எடுத்த நிலையிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். 
 
சென்னை அணியின் நிகிடி அபாரமாக பந்துவீசி 3 ஓவர்களில் வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதேபோல் சாஹர் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் சென்னை அணி வென்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடைத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments