Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: சென்னை vs மும்பை டிரா

Webdunia
திங்கள், 28 அக்டோபர் 2019 (19:24 IST)
ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் இரு அணிகளும் எந்தவித கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது 
 
சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி மும்பை அணியுடன் மோதியது. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தும் சென்னை வீரர்கள் அதனை நழுவ விட்டனர்.
 
அதனை தொடர்ந்து 15வது நிமிடத்தில் சென்னை வீரர் மீண்டும் ஒரு கோல் அடிக்க முயன்றபோது மும்பை கோல்கீப்பர் அதனை அபாரமாக தடுத்து கோல் அடிக்க விடாமல் செய்தார் 
 
இதனை அடுத்து இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக தொடர்ந்து விளையாடினார். இரு அணிகளும் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்காததால் ஆட்டத்தின் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக நடைபெற்றது
 
இந்த நிலையில் ஆட்டத்தின் 54 வது நிமிடத்தில் சென்னை மீண்டும் சென்னை வீரர்களுக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த கோலையும் மும்பை கோல்கீப்பர் தடுத்து விட்டதால் சென்னை அணிக்கு கோல் எதுவும் கிடைக்கவில்லை.
 
பின்னர் இரு அணிகளும் மாறி மாறி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காததால் போட்டி 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது

தொடர்புடைய செய்திகள்

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments