Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி: காயம் காரணமாக ரோகித் சர்மா விலகல்

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2014 (10:45 IST)
கைவிரல் எலும்பு முறிவு காயம் காரணமாக சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியிலிருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் 13, இல் தொடங்கி அக்டோபர் 4, வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ரோகித் சர்மா, கைவிரல் எலும்பு முறிவு காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டிகளில் ரோகித் சர்மாவால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், இக்காயம் காரணமாக எஞ்சிய இங்கிலாந்து போட்டியிலும் விளையாட முடியாமல் விலகியுள்ளார். ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

இப்போது ரோகித் சர்மா விலகி உள்ளதால் மும்பை இந்தியன்ஸ் அணியை போல்லார்ட் வழிநடத்துவார் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி 2011, 2013 ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

Show comments