Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி: காயம் காரணமாக ரோகித் சர்மா விலகல்

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி: காயம் காரணமாக ரோகித் சர்மா விலகல்
, திங்கள், 1 செப்டம்பர் 2014 (10:45 IST)
கைவிரல் எலும்பு முறிவு காயம் காரணமாக சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியிலிருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் 13, இல் தொடங்கி அக்டோபர் 4, வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ரோகித் சர்மா, கைவிரல் எலும்பு முறிவு காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டிகளில் ரோகித் சர்மாவால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், இக்காயம் காரணமாக எஞ்சிய இங்கிலாந்து போட்டியிலும் விளையாட முடியாமல் விலகியுள்ளார். ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

இப்போது ரோகித் சர்மா விலகி உள்ளதால் மும்பை இந்தியன்ஸ் அணியை போல்லார்ட் வழிநடத்துவார் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி 2011, 2013 ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil