Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிபோதையில் இருந்த மும்பை வீரர்… 15 ஆவது மாடியில் நடந்த அந்த சம்பவம்…. சஹால் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (10:01 IST)
தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் யஷ்வேந்திர சஹால் அதிர்ச்சியான செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

ஆர்சிபி அணியின் வெற்றித் தூண்களில் ஒருவராக இருந்தவர் யஷ்வேந்திர சஹால். பல இக்கட்டான போட்டிகளில் தனது சுழலால் அந்த அணிக்கு வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவரை கழட்டிவிட்டது ஆர் சிபி அணி. இதையடுத்து இப்போது அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அனியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட போது நடந்த ஒரு சம்பவம் பற்றி பகிர்ந்துள்ளார். அதில்’ நான் 2013 ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தபோது, குடிபோதையில் இருந்த ஒரு வீரர், என்னை 15 மாடியின் பால்கனியில் இருந்து கீழே தொங்கவிட்டார். ஒரு சிறு தவறு நடந்திருந்தாலும் அன்று நான் கீழே விழுந்திருப்பேன். அன்று நான் நூலிழையில் தப்பித்தேன்’ எனக் கூறியுள்ளார். ஆனால் சம்மந்தப்பட்ட அந்த மும்பை இந்தியன்ஸ் வீரர் யார் என்பது பற்றி எதுவும் சொல்லவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments