Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாது: புதிய சர்ச்சையில் தோனி!!

ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாது: புதிய சர்ச்சையில் தோனி!!
, திங்கள், 5 டிசம்பர் 2016 (12:33 IST)
இந்திய அணியின் கேப்டன் தோனி, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாது என்ற புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


 
 
டெஸ்ட் தொடரை தொடர்ந்து இங்கிலாந்து அணி, இந்தியாவிற்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
 
இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி புனேவில் உள்ள மைதானத்தில் ஜனவரி 15ம் தேதி நடைபெறவுள்ளது.
 
இந்நிலையில், தோனி கடைசியாக அக்டோபர் மாதம் நடைப்பெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். அதன்பின் எந்த போட்டியிலும் பங்கேற்வில்லை. 
 
இந்நிலையில், பிசிசிஐ-யின் விதிகளின்படி இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தோனி பங்கேற்க முடியாது என புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
 
இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கு இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில் தோனி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியமாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

72 வயதில் அறிமுகமான கிரிக்கெட் வீரர்