Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருக்கு எருமை மாடு பரிசு கொடுத்த மாமனார்..!

Mahendran
திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (14:39 IST)
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு அவரது மாமனார் எருமை மாடு பரிசளித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்த நிலையில் நேற்று இந்த போட்டிகள் முடிவடைந்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில்  தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதிம், பாகிஸ்தானுக்கு திரும்பிய நிலையில் அவருக்கு அவருடைய மாமனார் முகமது நவாஸ் எருமை நாட்டை பரிசாக வழங்கியுள்ளார்.

பாகிஸ்தானில் எருமை மாடு என்பது மதிப்பு மற்றும் கௌரவம் மிக்க ஒன்றாக கருதப்படும் நிலையில் தான் தனது மருமகனுக்கு எருமை மாட்டை பரிசாக வழங்கினேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பிறகும் நதீம் தனது கிராமம் மற்றும் அவர் கடந்து வந்த பாதையை நினைத்து பெருமை கொள்கிறார் என்றும் எருமை மாடு பரிசளித்த பின் அவரது மாமனார் பேட்டி அளித்துள்ளார்.

Edited by Mahendran

<>

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின், ஜடேஜா அபார பேட்டிங்.. முதல் நாள் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அஸ்வின் சதம், ஜடேஜா அரைசதம்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

உங்களின் அந்த இன்னிங்ஸ்தான் இந்திய வீரர் ஒருவரின் சிறந்த இன்னிங்ஸ்… கம்பீர் புகழாரம்!

சேப்பாக்கம் டெஸ்ட்: வங்கதேசம் பந்துவீச்சு! 634 நாட்களுக்கு பின் களமிறங்கும் ரிஷப் பண்ட்!

Chess Olympiad: 7 சுற்றிலும் தொடர் வெற்றி.. தங்கத்தை நோக்கி இந்திய தங்கங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments