Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய ஹாக்கி கேப்டன் ’பாலியல் பலாத்காரம்’ செய்ததாக மீண்டும் குற்றச்சாட்டு

இந்திய ஹாக்கி கேப்டன் ’பாலியல் பலாத்காரம்’ செய்ததாக மீண்டும் குற்றச்சாட்டு
, வெள்ளி, 17 ஜூன் 2016 (17:24 IST)
கடந்த பிப்ரவரி மாத துவக்கத்தில் பிரிட்டிஷ் வசித்துவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 21 வயதான அந்த பெண் லுதியான காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமான புகார் அளித்திருந்தார்.
 

 
அதில், இந்திய ஹாக்கி அணி கேப்டன் சர்தார் சிங் சர்தார் சிங் தன்னை உடலளவிலும், மனதளவிலும் துன்புறுத்தியதாகவும் அதனால் தான் கர்ப்பம் அடைந்ததாகவும் கூறியுள்ளார்.
 
தானும் சர்தார் சிங்கும் நான்கு ஆண்டுகளாக காதலர்களாக பழகி வந்ததாகவும், அப்போது பலமுறை தன்னை அவர் பயன்படுத்தி இருந்ததாகவும் கூறியிருந்தார். ஆனால், கடந்த ஆண்டு நான் கர்ப்பமானேன்.
 
மேலும், தாங்கள் திருமணம் செய்துகொள்வதாக இருந்ததாகவும் தற்போது, தன்னை ஏற்க மறுத்த சர்தார் சிங், கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தினார். இது குறித்து அவரிடம் கேட்பதற்காக அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்றபோது தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
 
இது குறித்து புகாரில் பஞ்சாப் காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் என்று கூறி தற்போது புதுடெல்லியில் உள்ள மகளிர் ஆணையத்தை போகல் நாடியுள்ளார்.
 
இது குறித்து கூறியுள்ள மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவல், ‘‘அந்த பெண் பெண் கொடுத்த புகார் உண்மையென்றால், சர்தார் சிங் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதில் இந்திய சட்டம் மிகவும் தெளிவாக உள்ளது. பஞ்சாப் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யாதது அதிர்ச்சியளிக்கிறது. இது சட்ட விரோதமானது ஆகும்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடியுமா? - இம்ரான் தாஹிர் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை; வெஸ்ட் இண்டீஸை பந்தாடிய தெ.ஆ.