Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்தான் உங்களை வெளி உலகுக்கு காட்டியது… சூரியகுமார் யாதவ்& இஷான் கிஷானை வறுத்தெடுத்த முன்னணி வீரர்!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (17:04 IST)
மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் தற்போது மோசமான பார்மில் விளையாடி வருகின்றனர்.

ஒரு காலத்தில் இவர்கள் இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வந்தனர். இவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய சிறப்பான ஆட்டத்தால்தான் இந்திய அணியில் இடம் பிடித்தனர். ஆனால் இந்திய அணியில் இடம் கிடைத்த பின்னர் முற்றிலுமாக பார்மை இழந்துவிட்டனர்.

இதுகுறித்து பல திசைகளில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா ‘இந்திய அணிக்கு தேர்வாகியதால் இருவரின் ஆட்டத்திறனும் பின் தங்கியிருக்கலாம். கடந்த காலை பெருமைகளிலேயே பல வீரர்கள் திளைத்து வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட்தான் உங்களை அடையாளம் காட்டியது. இவர்கள் இருவரை  விட சௌரவ் திவாரி அதிக ஆர்வத்தோடு விளையாடுகிறார். சூர்யகுமாரும், இஷான் கிஷானும் தொழில் நேர்த்தியுடன் விளையாடி மும்பை அணியை மேலே கொண்டுவரவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments